லோகத்து பீஷ்மர் ட்ரீமர் ஐயா, 3000 பதிவுகளை தாண்டியமைக்கு வாழ்த்துகள். மச்சானின் வாசகர் சவாலுக்கு பின் தாங்கள் கதை எழுதவே இல்லை என்று நினைக்கிறேன். தங்களின் சரஸ்வதியை தேடி கதையை வெகுவாக ரசித்து படித்திருக்கிறேன். படைப்பாளிகளுக்கு தாங்கள் அளிக்கும் பின்னூட்டங்களும் ரசிக்கத்தக்கவை. சமீபத்தில் ஸ்.லோ எழுதிய வாத்தி ரிட்டர்ன்ஸ் கதைக்கு ஹா ஹா என்ற சிரிப்பு ஓசையையே பின்னூட்டமாக போட்டு சிரிக்க வைத்தீர்கள்.
இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று தாங்கள் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகள்!
திரியை தொடங்கிய நிஷாதாசனுக்கு பாராட்டுக்கள்!
|