நடிகர் ரகுவரன் சென்னையில் காலாமானார். உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த பல வருடங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர், அப்பழக்கத்திலிருந்து மீண்டு, மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் அசோகா. நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன், அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வந்தார். தீவிர சாய்பாபா பக்தர். அவ்வப்போது புட்டபர்த்தி சென்று சாய்பாபாவை தரிசிக்கும் வழக்கமும் அவருக்கு இருந்தது. சமீபகாலமாக மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ரகுவரன், இதன் காரணமாக உடல் நலத்தில் சீர்கேடு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். ரகுவரனின் ஆத்மா சாந்தியடைய காமலோகம் சார்பில் பிரார்த்திப்போம்....
நன்றி: தமிழ்சினிமா.காம்
|