Quote:
Originally Posted by Mathan
இதுபோன்ற பின்னூட்டங்கள் எழுத்தாளருக்கு ஓர் மனநிறைவையும் தராது, மாறாக கஷ்டப்பட்டு உழைத்து எழுதும் கதாசிரியர்களுக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தும்
|
இது முற்றிலும் உண்மை தான். கஷ்டப் படுத்து நாள்கணக்கில் யோசித்து எழுதும் பல கதைகளுக்கு. "சூப்பர்", "அருமையாக உள்ளது", "நல்ல கதை" இது போன்ற பின்னூட்டங்கள் பலர் இடுவதுண்டு. இந்த பின்நூட்டனகள் எழுத்தாளர்களுக்கு எந்த மன நிறைவையும் தரப் போவதில்லை. இன்னொரு உண்மையை சொல்ல வேண்டுமெனில், நான் கூட ஆரம்பத்தில் இப்படி செய்ததுண்டு. அதன் பிறகு கதைகள் எழுத தொடங்கிய பின்பு தான் எழுத்தாளர்களின் கஷ்டம எனக்கு புரிந்தது.
கதையை படியுங்கள்!
நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்!
அந்த கதையைப் பற்றி என்ன நினைக்கிறீகள் என சொல்லுங்கள்!
அந்த கதைபோல் அனுபவம் தங்களுக்கு நடந்தது உண்டா என சொல்லுங்கள்!
கதையில் தங்களுக்கு பிடித்த விசயத்தை எடுத்து சொல்லுங்கள்!
அதன் குறைகளை எழுத்தாளர் மனது புண்படா வண்ணம் எடுத்து சொல்லுங்கள்!
இப்படி பல வகையாக பின்னூட்டங்கள் இடலாம். தாங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டம் தான் கதை எழுதுபவர்களுக்கு எனர்ஜி.
இப்படி அனைவரும் படிக்கும் ஒவ்வொருவரின் படிப்புகளுக்கும் பின்னூட்டம் அளியுங்கள். மனதில் பட்டதை நல்ல விதமாக சொல்லுங்கள்.