எனக்கு மௌனி யாருனு கூட தெரியாது முன் பின் பார்த்தது கூட இல்ல ஏன் ஒரு பிரைவேட் மெசேஜ் கூட பண்ணது இல்ல ஆனா இன்று மௌனி இன்று இந்த உலகத்தில் இல்லை என்ற செய்தியை அறிந்து என் கண்கள் குளமானது.
ஏதோ என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பரை இழந்தது போன்ற ஒரு உணர்வு சொல்ல முடியாத சோகம்.
நான் பல தளங்களில் மௌனியின் பல கதைகளை படித்து மகிழ்ந்து இருக்கிறேன். என்னை போலவே பல பேரை மகிழ்வித்தவர் மௌனி.
ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
என்ன வாழ்க்கைடா இது.
இந்த இரண்டு வருடங்களில் என் வாழ்க்கையிலும் சரி எனக்கு பிடித்த பிரபலங்களிலும் சரி நான் இழக்க கூடாத பல பேரை இழந்து விட்டேன் இன்று மௌனி.
என்ன சொல்றதுன்னே தெரியல. தன் எழுத்துக்களால் இன்னும் வாழும் மௌனிக்கு நன்றி.
|