View Single Post
  #41  
Old 02-03-09, 01:55 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
நண்பர்களில் சிலருக்கு ழ,வை எங்கே பயன்படுத்தணும் என்பதில் சந்தேகம்,அதை எனக்கு தெரிந்த வரை தீர்க்க முயற்சிக்கிறேன்.

மழை.பழம்.வாழை.கோழி.கோழை,தாழி,தாழ்ப்பாள்,காழ்ப்பு,ஆழம்,பாழும்,வாழும்,தாழும்,எழு,எழு,ஏழு,வாழு,பாழு,குழம்பு,தழும்பு,அழும்பு,எழும்பு,எழுந்து பழுத்து,கழுத்து எழுத்து,அழுத்து,தமிழ்,,,,
இது போன்ற இன்னும் பல வாக்கியங்களில் இந்த தமிழின்,அனேகமாக உலகின் மொழிகளிலேயே,சிறந்த எழுத்தான ழ வை பயன்படுத்த வேண்டும்,சிலர் இது போன்ற வார்த்தைகளில் இந்த ழ வுக்கு பதில் ள வை,சிலர் ய வையும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது தவறு.

சிலருக்கு ழ வை உச்சரிப்பதில் பிரசினை இருக்கும்.இதை உச்சரிக்க முதலில் சொன்ன மாதிரி,ண,ள வை உச்சரிப்பதை விட இன்னும் கொஞ்சம் உள்ளாக வாயின் மேல் பகுதியை{விட்டத்தை} நாக்கு தொட்டால் இந்த ழ வின் ஒலி,ஓசை,உச்சரிப்பு சரியாக இருக்கும்.

கூத்தக்குடியில் இருந்த அரசு ஆரம்ப நிலை பள்ளியில் படித்த போது {3,4ம் வகுப்பு}
சில மாணவர்களுக்கு இந்த ழ வராது.அவர்கள் பழத்தை பயம்,பளம் இது போல இன்னும் பல சொற்களை என்று சொல்வார்கள்.

இதை சரி செய்ய அப்போது ஆசிரியர்கள் மாணவர்களை சொல்லி ழ பழக சொன்ன வாக்கியம் இது. வாழை பழத்தை கோழிக் குஞ்சு விழுக்,விழுக்கென விழுங்கியது
இதை எழுதும் போது என் பால்ய காலத்துக்கே போய் விட்டேன்,
option.
refrence.
responce.
இவைகளை தமிழில் எப்படி எழுத?
நண்பர்கள் விளக்கினால் மகிழ்ச்சி.
Reply With Quote