காமலோக நண்பர்களே..! உலகத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், தனது 24 வருட இண்டர் நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 16.11.2013 அன்று ஓய்வு பெற்று விட்டார். அன்றே சில மணித்துளிகளில் உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இந்தியாவின் தலை சிறந்த விருதான "பாரத் ரத்னா" விருதினை அவருக்கு வழங்குவதாக இந்திய அரசு உடனேயே அறிவித்து அவரை மேலும் கௌரவப்படுத்தி விட்டது. இதற்கு முன்னால் பத்ப விபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் தனது 40 வது வயதிலேயே 'பாரத் ரத்னா' பட்டம் பெறுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.
சச்சின் டெண்டுல்கர் நடத்திய உலக சாதனைகளை பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவரை குறித்தும் அவரது சாதனைகளை குறித்தும் விளக்கமாக தெரிய வேண்டுமெனில்
http://en.wikipedia.org/wiki/Sachin_Tendulkar என்ற சுட்டியை சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.
காமலோகத்தின் சார்பாக இந்த மகத்தான சாதனையாளருக்கு நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம்.