Quote:
Originally Posted by Mathan
சமயங்களில் லேட்டஸ்ட் ஃபாரம் நியூஸ்சில் லேட்டஸ்ட் போஸ்ட் வரிசையை பார்த்தாலே நமக்கு புரியும். சொற்ப நேரத்தில் ஒருவரது பெயர் மட்டுமே வரிசையாக ஓடிக்கொண்டே இருக்கும். ஓர் உறுப்பினரின் பெயர் அஆஇஈஉஊஎஏ என வைத்துக்கொள்வோம்,
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
அஆஇஈஉஊஎஏ
இப்படி தொடர்ந்து ஓரிரு நிமிட இடைவெளியில் ஓடிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் பார்த்தால் இந்த நபர்கள் இதுபோன்று இடும் பின்னூட்டங்கள் எல்லாமே கதைக்காகவே தான் இருக்கும். அந்த பின்னூட்டங்களை படித்துப்பார்த்தாலே தெரியும் இந்த நபர் கதையை படிக்காமலே பின்னூட்டம் இட்டு சென்றுள்ளர் என தெல்லத்தெளிவாக புரியும்.
|
நண்பர் மதனின் ஆதங்கம் புரிகின்றது.. இருந்த போதும் தொடர்ந்தார் போல் ஒருவரின் பின்னூட்டங்கள் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் வருகின்றது என்பதற்காகவே அவர் கதையைப் படிக்காமலேயே பின்னூட்டமிடுகின்றார் என்ற ஒரு முடிவுக்கும் நாம் வந்து விடக்கூடாது.. ஏனென்றால் சில வேளைகளில்.. அதுவும் இப்போது மின் தடை அதிகம் உள்ள இக்கால கட்டத்தில் நானெல்லாம் மொத்தமாக நேரம் கிடைக்கும் போது திரிகளைப் படித்து அதற்கு பின்னூட்டக் குறிப்புகளையும் நோட்பேடில் குறித்து வைத்துக் கொண்டு பிறகு வேறொரு சமயம் வரும் போது அந்த திரிகளை வரிசையாக எடுத்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இடுவதும் உண்டு.. அதனால் நண்பர் மதன் குறிப்பிடுவது போல் அடுத்தடுத்து பெயர்கள் வருவதும் உண்டு.. அதனால் திரிகளைப் படிக்காமலேயே இடும் பின்னூட்டமென்று யாரும் அதைக் கருதக் கூடாது.. பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தே அது அந்தத் திரிகளைப் படித்து பார்த்துப் பின் போடப்பட்ட பின்னூட்டமா? அல்லது படிக்காமலேயே போட்ட பின்னூட்டமா? என்ற ஒரு முடிவுக்கு நாம் வர வேண்டும் என அன்புடன் நண்பர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்..