இன்று காலையில் நண்பர் நல்லவன் அவர்கள் போனில் நம் லோக பிதாமகராக விளங்கிய அண்ணன் ட்ரீமர் அவர்கள் இப்பூவுலகம் விடுத்து மேலுலகத்தில் இறைவனின் பாதம் அடைந்தார் என்ற சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்ததோடு சொல்லொன்னா துயரமும் அடைந்தேன்.
அண்ணன் ட்ரீமர் அவர்களை நண்பர்கள் ராசு மற்றும் ராஜேஷ் அவர்களின் உதவியால் இரு முறை சந்தித்து பேசும் பாக்கியம் பெற்றவன். வயதில் மூத்திருந்தாலும் அவர் பேச்சில் குழந்தைதனமிருக்கும் எழுத்தில் இளமையிருக்கும்.
உடல் நலம் முடியாத சமயங்களில் கூட லோகத்தில் பங்களிக்க அவர் ஆர்வம் கொண்டவராய் இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
அமரரான அண்ணன் ட்ரீமர் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குவதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன்.
அண்ணனின் ஆன்மா இறைவனின் பாதத்தில் சாந்தியுடன் இளைப்பாற அந்த ஆண்டவனை பிராத்திக்கிரேன்.
|