நண்பர் வெங்கட்டின் எழுத்தாளுமையை நான் மச்சானின் வா.சவால் 59 லேயே முதன் முறையாக கண்டேன். எந்த டாப்பிக்கிலும் மிக அற்புதமாக எழுதும் ஆற்றல் இவரிடம் இருப்பதைக் கண்டு நான் மிகவும் பிரமித்து போனேன். பின்பு தான் தெரிந்தது இவர் ஓர் வழக்கறிஞர் என்றும் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான கதைகள் எழுதியவர் என்று. ஆக இவர் எழுத்துலகிற்கு புதியவரல்ல என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
நண்பர் வெங்கட்டின் இந்த தொடர்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் கடைசி பாகத்தில் படிக்கும் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். நான் அவரது இறுதி பாகத்திலேயே சொல்லிவிட்டேன், இந்த கதை உங்களுக்கு லோகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.
நினைத்தபடியே நண்பர் தங்கவாசலை அடைந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பாராட்டுகள் நண்பா.
அடுத்தபடியாக தியாகுவின் தொடர்ச்சியும் மிக பிரம்மாதமாக இருந்தது. நண்பர் வெங்கட் எங்கேயாவது கொஞ்சம் சொதப்பி இருந்தால், தியாகுவின் தொடர்ச்சி நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். தியாகுவும் அவ்வளவு பிரம்மாதமாக எழுதியிருந்தார்.
ஆனால் ஓர் சகப்போட்டியாளராக தியாகு எப்படி உண்மை நிலையை எடுத்துறைத்திருக்கிறார் என பார்த்தால் உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. அதற்கு ராஜேஷ் அண்ணனும் எப்படி புகழ்ந்திருக்கிறார் என பார்த்தால் புரியும்.
Quote:
Originally Posted by tdrajesh
Quote:
Originally Posted by thyagust
ஒரு கிரைம் நாவலைப் படித்தது போன்ற உணர்வு படித்து முடித்ததும் வருகிறது. அதற்கு என் வாழ்த்துக்கள். வெற்றி பெற எல்லா அம்சங்களும் உங்கள் கதையில் இருக்கிறது வெங்கட்.
|
ஒரு போட்டியாளர் சகப்போட்டியாளரின் கதையை பாராட்டி ' வெற்றி பெற எல்லா அம்சங்களும் உங்கள் கதையில் இருக்கிறது' என்று சொல்லுவது நம் லோகத்தில் மட்டுமே நடக்கும். வெல் டன் தியாகு. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
|
தியாகுவை பாராட்ட வார்த்தையே இல்லை. வெல்டன் தியாகு. மனம் தளராது அடுத்தடுத்த போட்டியில் ஏதோ ஒன்றில், அடுத்த போட்டியாக கூட இருக்கலாம் கலந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தங்கவாசல் மிக அருகிலேயே உள்ளது. பாராட்டுகள் தியாகு.
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.