Quote:
Originally Posted by venkat8
4000 பதிவுகளை தாண்டிய நண்பர் மதனுக்கு வாழ்த்துகள். புயல் கரையை கடந்தது போல் ஒரு அமர கதையை மீண்டும் படைப்பீர்களா நண்பா?
அதன்பின் தாங்கள் எவ்வளவோ கதை எழுதியிருந்தாலும் புயல் கதையின் சிறப்பை தங்களின் வேறு கதைகள் எட்டவில்லை.
மீண்டும் அதுபோல் ஒரு கதையை எதிர்ப்பார்க்கிறேன் நண்பா!
|
Quote:
Originally Posted by tdrajesh
4000 பதிவுகளை தாண்டிய தம்பி மதனுக்கு என் பாராட்டுகள்.
சிறப்பான பல கதைகளை தந்தவர், முக்கியமாக 'புயல் கரையை கடந்தது' என்ற காவியத்தை கொடுத்தவர்,
|
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
நாலாயிரம் பதிவுகளைக் கடந்த நண்பர் மதன் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நேரம் கிடைக்கும் போது அவரின் புயல் கரையைக் கடந்தது கதையைப் படிக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
|
Quote:
Originally Posted by dreamer
நாலாயிரம் இடுகைகள் -- அவற்றில் பல முத்தான படைப்புகள், மறைவில்லாது தம் கருத்துகளைத் தாங்கி வரும் விரிவான பின்னூட்டங்கள், --- மதன், உங்கள் திறங்கண்டு வியக்கிறேன், தம்பி.வாழ்க, வளர்க,
|
இவர்களைப்போன்ற பல ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் பாராட்டுப்பெற்ற தங்களின் "புயல் கரையை கடந்தது" என்ற காவியம் மச்சானின் வாசகர் சவாலில் இடம்பெற்றது என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் நண்பரே.
Quote:
Originally Posted by RasaRasan
அன்பு நண்பன் மதனின் 4000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.
எல்லாருக்கும் கோபம் வரும். எனக்கும் அடிக்கடி கோபம் வரும். ஆனால் என்னை விட பெரிய கோபக்காரர் மதன் என்பது நான் மட்டுமல்ல நமது லோகம் அறிந்ததே.
நான் என் மனதில் உள்ள கோபத்தை கொஞ்சம் நாசூக்காய் வெளிப்படுத்துவேன். ஆனால் மதனோ தன் மனதில் உள்ளதை சட்டென சொல்லி தன் மனதில் உள்ளதை கொட்டி விடுவார். இதனால் பல நண்பர்களிடம் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும், மீண்டும் அவர்களோடு அவர் நண்பராக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கூறாமல் கதையை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் நண்பர் மதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
தங்களின் குணநலன்களை குறித்து என் மனதில் நினைத்ததை அப்படியே படம்பிடித்துக்காட்டி விட்டார் நண்பர் ராரா.
4000 பதிவுகளுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள். மேலும் பல்லாயிரம் பதிவுகள் பதித்திட வேண்டும். அதில் தங்களின் பல காவியங்களும் இடம் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா.