ஹா ஹா ... நண்பரே ஒருசில ஆன்லைன் பரீட்சைகளில் அல்லது ப்ராஜக்ட் களிலும் இணையத்தில் உள்ள விடையங்கள் இருக்கின்றதா என பரிசோதிக்கின்றார்கள். அதிலும் 20 வீதம்வரை விலக்கழிக்கப்படுகின்றது ... மீதி 80 % கண்டிப்பாக சுய ஆக்கமாக இருக்கவேண்டும் என்பதுதான் பல இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஏனென்றால் ஒரே மாதிரியான சில விடையங்கள் வெவ்வேறு நபர்களுக்கு தோன்றுவதை ஒருசில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாது. அதிலும் காமம் என்றும்போது அனைத்து கதைகளுமே ஒரே இடத்தைக் குறித்துத்தான் செல்லும். அதை நீங்கள் எவ்வாறு சொல்கிறீர்கள் என்பதுதான் விடையம்.
உ+ம்
இணையத்தில் படித்த வசனம்.
"சுந்தர் தனக்குப்பிடித்த பெண்ணான சுபாவை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்."
காப்பி பேஸ்ட்
"ராசன் தனக்குப்பிடித்த பெண்ணான ஷிவானியை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்."
குறித்த வசனத்திலுள்ள பல சொற்கள் ஒத்துப்போகின்றமையால் இவ்வாறு வருவது காப்பி பேஸ்ட்டாக கருதப்படும்
அதையே ஒருவர் படித்து மனதில் நின்ற விடையத்தை தனக்கான பாணியில் எழுதும்போது
"குளித்துவிட்டு தனிமையில் தலைதுவட்டிக்கொண்டு நின்ற தன் மனம்கவர் கள்ளி கீதாவை ஷிவா பூனைபோல் பின்பக்கமாகச்சென்று அவள் அழகில் கிறங்கிப்போய் அவளை ஆசையோடு பின்புறமாகவே கட்டியணைத்துக்கொண்டான் "
என்று எழுதலாம் ஏனென்றால் பின்புறமாக கட்டியணைப்பது என்பது பொதுவான விடையம் அதை ஒரு எழுத்தாளர் எவ்வாறு எடுத்துக்காட்டுகின்றார் என்பதே கதையாக அமைகின்றது.
காப்பி பேஸ்ட் பன்னப்படும் வசனங்கள் எதோ ஒரு இடத்தில் வாசிப்பவர்களுக்கு அதை காட்டிக்கொடுக்கும் ஏனென்றால் ஒருவர் தனக்குப் பிடித்து வாசித்த வசனத்தை எவ்வாறு மனதில் வைத்திருக்கின்றாரோ அதேபோல் இன்னொருவரின் மனதையும் அந்த வசனம் கவர்ந்திருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் காப்பி பேஸ்ட் காட்டிக்கொடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல் அந்தக்கதையின் பாணியையே மாற்றியமைத்து ஏற்கனவே படித்த கதைபோல அதன் போக்கு செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. அதையே ஒருவர் படித்த வசனத்தை அவரவர் பாணியில் அவர் கதையின் சூழ்நிலைக்கேற்ப எழுத முயற்சிக்கும்போது. அதன் ரசனை அதிகமாகும்... வாக்கியங்கள் தித்திப்பாகும் படிப்பவர் மனதையும் கவர வாய்ப்புண்டு.
குறிப்பு - புதியவர் மைய்யத்தில் சிறைச்சாலை உள்ளது அதில் உள்ள கதைகளையும் அது முடக்கப்பட்டதற்கான காரணங்களையும் படியுங்கள் இன்னும் தெளிவாகப் புரியும்
|