Quote:
Originally Posted by Nallavan1010
"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".
|
நீங்க யாரு தமிழ் புலவரா ?
எங்கே பார்த்தாலும் ஒரு குரள் இல்லைனா இது மாதிரி கவிதை வரிகள் எல்லாம் போட்டு தாக்குறீங்களே.
நீங்க ஏன் கவிதை போட்டியிலே கலந்துக்கல ?
Quote:
Originally Posted by Nallavan1010
இது தான் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும்
|
இது நூறு சதவிகிதம் உண்மை.
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது.
நல்லவன் உங்க பெயருக்கு பக்கத்திலே அன்டர்ஸ்கோர் போட்டு 'வல்லவன்'னையும் சேர்த்துக்குங்க. சும்மா டமாஷ்.
என்ன தான் சொன்னாலும், இப்போ நீதிபதிக்கு 'மை லார்டு' என்ற பட்டமெல்லாம் போயிட்டு.
நீதிபதிகளே பல இடங்கள்ல கையூட்டு பெற்று நீதி அழிந்துக்கொண்டு தான் வருகிறது. அதனால் தான் நானும் இந்த திரியில் எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தை பற்றி கூடுதல் தகவல் விக்கிபீடியாவில் படித்தேன் நேற்று.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே இரண்டாவது பெரியது என குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதலாவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலகில் முதலாவது பெரிய வளாகம் கொன்ட நீதிமன்றம் லண்டனில் உள்ளதாம்.