அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி
முதலில் தங்களது பொன்னான வாக்குகளை அளித்து என்னை இந்த சவாலில் முதலிடத்தை அடையவும், அதன் மூலம் தங்க வாயிலை அடைய, வாய்ப்பளித்த அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனம் நிரைந்த நன்றிகளை கூறிக்கொள்கிரேன்.
என்னுடன் இந்த சவாலில் பங்கு கொண்டு சிறந்த படைப்புக்களை தந்த, சகோதரி சுஜாதா மற்றும் நண்பர்கள் நைஸ்கையினிண்டியா, ஜான்ஸி, தேவா, காமரோஜா ஆகியோரை மனதார பாராட்டுகிரேன்.
எனது இந்த தொடர் படைப்புகளை படித்து வளமான பின்னூட்டங்களை இட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிரேன்.
எனது முதல் பிரவேசத்தில் எந்த சவாலிலும் பங்கெடுக்காமல் பதிப்புக்களின் அடிப்படையில் தான் தங்க வாசலை அடைந்தேன்.
ஆனால் எனது மறு பிரவேசத்தில் நான் தங்க வாசலை அடையவதில் என்னைவிட அதிக ஆர்வமும் அக்கரையும் கொண்ட நண்பர்கள் பலர் தங்களது பின்னூட்டம் மற்றும் தனி மடல்கள் மூலம் ஊக்கமும் உற்சசாகமும் காட்ட சவால்களில் பங்கு கொண்டதன் பலனாக வெண்கல வாசலில் அனுமதிக்கப்பட்ட நான் வெள்ளி வாசலை அடைந்து தற்பொழுது தங்க வாயில் அடையும் வாய்ப்பினை பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிரது.
இதற்கு காரணமான அனைத்து நண்ப/நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த சவாலை பொருத்த மட்டிலும் பங்கெடுப்போமா அல்லது வேண்டாமா என்ற ஒத்தையா ரெட்டையா என்ற நிலையில் இருந்த என்னை, தம்பி ஹெர்மி, அண்ணா நீங்க எறங்குரீங்க, பங்கு கொள்ரீங்க, கலக்குரீங்கன்னு உரிமையுடன் அதட்டவே அதனால் உந்தப்பட்டு பங்கு கொண்டேன் அதன் பலனும் கண்டேன். அந்த உந்துதளுக்கு காணமான தம்பி ஹெர்மிக்கு என் நெஞ்சம் நிரைந்த நன்றிகள்.
பொதுவாக எனது இந்த சவாலையும் சேர்த்து பல படைப்புகளின் தொடர்சிகளுக்கு தனது வேளை பளுவுக்கிடையே சிரமம் பாராது கேட்டுக் கொண்ட உடனேயே சுட்டி இணைத்து டெக்னிக்ல் உதவி புரிந்து வரும் நண்பர் பச்சியையும் இந்த தருணத்தில் நினைவுகூர்வதோடு எனது நன்றியையும் அவருக்கு தெரிவித்து கொள்கிரேன்.
இந்த சவாலை திறம்பட நடத்தி சிறப்பாக நிரைவு செய்த நண்பர் அசோ அவர்களையும் மற்ற நிர்வாகத்தினரையும் பாராட்டுவதோடு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
Last edited by anabayan; 28-01-12 at 02:48 PM.
|