புதியவர்களை ஊக்குவிக்க என் யோசனை!
கதையை எப்படி துவங்கிறோம் என்று முக்கியமில்லை...எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று சுஜாதா சொல்வார். உண்மைதான்.
ஒர் இயக்கம்/ தளம் குறைவு இல்லாமல் செல்ல புதியவர்கள் முக்கியம். அவர்கள் பங்கு பெற, ஊக்கம் முக்கியம். மாத கதைகள் சிறந்த கதை விருது அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
என் யோசனை இதுதான் - என் போன்ற மக்கள் இனி போட்டியில் இருந்து விலகிக்கொள்ளலாமே ? மூத்த எழுத்தாளர்கள் தாங்கள் விருப்பட்டால் என்று இல்லை - ஒரு பாலிஸியாக மாத விருதிலிருந்து விலக்கப்பட்டால், புதியவர்களுக்கு இது நல்ல உதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.
இப்படி ஒரு ப்ளானை நான் முன்வைக்கிறேன். அப்படி ஒரு ப்ளான் வந்தால், முதல் ஆளாக என்னை உட்படுத்திக்கொள்ள நான் தயார்.
உங்கள் கலந்துரையாடலுக்கு!
நன்றி
மௌனி
|