நண்பர் காமக்கேடியிடம் எனக்கு எப்பொழுதும் ஓர் பற்றுதல் உண்டு. சில காலமாக நான் தளத்தில் ஆக்ட்டீவாக இல்லை, அவருடன் தொலைப்பேசியில் பேசவும் இல்லை. அஞ்சான வாசம். அந்த அஞ்சான வாசத்தின் பொழுது தான், கோவை சந்திப்பில் அவரை சந்திக்க நான் பெரும்பாலும் ஆயத்தமாக இருந்த நிலையில் எனக்கு தளத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவம் நான் தளத்திலிருந்து முற்றிலுமாக விலகி இருக்க காரணமாக இருந்தது.
ஒரு ஃபோன் செய்து வரமுடியாதென்பதை தெரியப்படுத்தவும் எனக்கு ஏனோ மனதில் ஓர் தைரியும் கூட வரவில்லை. ரொம்பவும் அப்செட் என்றே சொல்லலாம். அதற்க்காக நான் இப்பொழுது மன்னிப்பு கோருகிறேன் நண்பா.
காமகேடி நல்ல ரசிகர் சிறந்த பின்னூட்டவாதி என தான் பலருக்கும் தெரியும், ஆனால் அவர் ஓர் மிகச்சிறந்த நகைச்சுவை சிந்தனையாளர் என்பது பலரும் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். நண்பர் காமகேடியுடன் சில முறை தொலைப்பேசியில் பேசியிருந்தாலும் அவை மிகவும் இனிமையான தருணங்கள். நண்பரின் நகைச்சுவை உணர்வை நான் நன்கு அறிவேன். இவர் என்னுடன் தொலைப்பேசியில் பேசிய நாட்களில் கூறிய உண்மை நகைச்சுவை சம்பவங்களை கேட்டு நான் வாய் விட்டு சிரித்ததுண்டு. அவரது நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து லோகத்தில் வழங்குமாறு அப்பொழுதே அவரிடம் கேட்டிருந்தேன். நண்பர் செய்தாரா இல்லையா என்பதை இனி தான் ஆராயவேண்டும். இதுவரை இல்லையெனில் நண்பர் கேடியிடம் வேண்டுகோள் வைக்கின்றேன்.
நண்பா... விரைவில் உங்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொள்கிறேன். நீங்கள் மேலும் பல மைல் கற்கலை கடக்க வாழ்த்துகள் நண்பா. ஊருக்கு வரும் பொழுது உங்களை அவசியம் சந்திக்கிறேன் !!
|