செல்வன் செல்வி இருப்பதே தெரியாது. பரபரப்பு ஆரவாரமே இல்லாமல் அமைதியாக இருப்பார். சர்சையான பதிப்புகள் எதுவுமே செய்யாதவர். ஆனால் இவரின் பங்களிப்பு இல்லாத இடமே இருக்காது என்று சொல்லலாம். பின்னூட்டங்கள் மூலமே பலரை ஊக்குவித்து கொன்டு இருக்கிறார். கேப் விட்டு வந்து ஒரே நாளில் நிரப்பி விடுவார் கருத்துகளை.
இவரின் பின்னூட்டத்தில் ஒரு விசேசம் இருக்கும். அதாவது சிம்பிள் அன்ட் பெஸ்ட் பின்னூட்டம். வழ வழ என்று எழுதமாட்டார். நாலு வரி தான் எழுதுவார் ஆனால் அதன் மூலமே படைப்பின் அத்தனை சிறப்பு அம்சங்களையும் எடுத்து சொல்லி விடுவார். அதே சமயம் குறைகளை சுட்டி காட்டாமல் போக மாட்டார்.
பாராட்டுகள் செல்வன் செல்வி (பாராட்ட கூடாது உங்களுக்கு நன்றி தான் சொல்ல வேன்டும்)
இவரை போன்றவர்கள் சைலன்ட் சேவை இந்த லோகத்துக்கு பெரிதும் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வைத்த தமிழாவுக்கும் நன்றி
|