இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்றது, ஏதோ நாமே விளையாடி வெற்றியடைந்தது போல இருக்கிறது. தொண்டைக் குழியில் அவஸ்தையாய், கிரிக்கெட் பந்து போல் மகிழ்ச்சி அடைத்துக் கொண்டு...... கை கால்களில் பிரவுன் பழுப்பில் இழையோடும் கொஞ்சநஞ்ச பூனை முடிகளும் ஏகத்துக்கு சிலிர்த்துக் கொண்டு நின்று, கண்களிரண்டும் பனித்து, கண்ணீர்த் திவலைகள் கன்னக் கதுப்பில் வழிந்தோடியதில்.... சொல்லவொண்ணா கிறக்கம் தரும் சீரிய சுகானுபவத்தில் திளைத்து, பரமானந்தப் பேரின்பப் பரவசப் பெருவெள்ளமாய் நாடி நரம்பெங்கும் பாய்கின்ற தெய்வீக தேவசுகத்தில் மெய்மறந்து நிற்கின்றேன்.
|