வாவ்...என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் இந்த போட்டியில் கலந்து கொள்ள என் கதையை பதிந்தபோது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு துளியும் இல்லை. என்னை விட அனுபவசாலிகளும் திறமைசாலிகளும் காமலோகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள், எனவே இந்த போட்டியில் கலந்து கொண்டு மற்றவர் படைப்பை முழுவதுமாக படிப்பதால் நான் என் கதை எழுதும் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்பதாலேயே கலந்து கொண்டேன்.
முதல் இரு தொடர்ச்சிகளை நான் பதித்தபின்னும் நமது லோக நண்பர்கள் எவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. எனவே நானும் போட்டியில் இருந்து விலகும் எண்ணத்தில் இருந்தேன். ஏனென்றால் வெற்றி பெரும் தகுதி உள்ள கதையை உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம்தான் தீர்மானிக்க வேண்டும் அல்லவா ?!
அந்த சமயத்தில் மச்சான் அவர்கள் போட்டியில் கலந்தது எனக்கு அளவற்ற உற்சாகத்தை அளித்தது. மிகக்கடுமையான சவாலை என் கதைக்கு பதிலாக அவர் படைத்தார். மிகுந்த உத்வேகத்துடன் கதையை ஒரு வழியாக முடித்தேன்.
மச்சான் அவர்கள் எனக்கு அளித்த ஆதரவை மறக்கவே முடியாது. அவர் போட்டியாளராக இருந்தாலும் என்னுடைய தொடர்ச்சிகள் அனைத்திற்கும் அற்புதமான பாராட்டுகளை பின்னூட்டமாக அளித்தார். மிக்க நன்றி நண்பரே.
முழுக்க படித்து வாக்களித்து ரிஷிபத்தினியை வெற்றிபெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி. அனைவர் பெயரையும் குறிப்பிட்டு சொல்லி வாழ்த்து பெற ஆசையாக இருந்தாலும், முதல் வெற்றியால் சற்று பதட்டத்துடனும் மிக்க மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். எனவே அனைத்து நண்பர்களும் என் நன்றிகளை ஏற்றுக்கொண்டு வாழ்த்தவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
முக்கியமாக காமலோக நிர்வாகிகளுக்கு எனது மனம் நிறைந்த அளவற்ற நன்றிகள்.
|