எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர்
'கனவுலகச் சஞ்சாரி' அவர்களுக்கு
அவருக்கு என்னுடைய நெடுஞ்சான்கிடையான வணக்கமும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியறிதலுடன் !
என்னுடைய எழுத்து நடையை முழுவதும் மனதில் உள்வாங்கி விமர்சனம் செய்யும் அவரை என்னால் சற்றும் மறக்கவொண்ணா வழிகாட்டிகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் இந்த அய்யா!
அவரது பின்னூட்டங்கள் யாவும் எந்தவொரு இனிப்புப் பூச்சோ அல்லது தேன் கலவாத [ படைப்பாளரின் நோய் மட்டுமே தீர்க்கும் ] மிகவும் பயன் பயக்கும் கசப்பு மாத்திரைகள்தாம்.
அவைகளை விழுங்குவது யாவருக்கும் சிரமம்தான். விழுங்கினால் படைப்பாளரின் எழுத்தும் பண்படும்,படைப்பாளரின் நடையும் சீர்படும்.
அவைகளால் பயனுற்றோர் பலரில் நானும் ஒருவன் !
அதனால், இந்த ஆதாயங்கள் பல, படைப்பாளருக்கு இலவசமாக தேடித் தரும் அரு மருந்து அவை.
அதனால், அவர் நீடூழி வாழ்ந்து எம் போன்ற 'கிணற்றுத் தவளை'களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்து முன்னேற வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு !
அவரின் இந்த சாதனையை வெளிச்சம் போட்டுக் காண்பித்த
ஆசிரியர் Nisadasan,
அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும், நன்றியறிதலுடன் !