பழைய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்
அன்பு நண்பர்களே...
1998-99 வருடம் முதலே பலர் என்னுடன் தொடர்ந்து வருகின்றீர்கள். தமிழ் எழுத்துக்களை எழுதியிராதவர்களையும் நம் குழு எழுத வைத்தது, நீங்களும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்தீர்கள். ஆனால், இன்று உங்களில் பலரோ, தமிழில் எழுதாமலும், எதுவுமே பதிக்காமலும் வந்து செல்லுகிறீர்கள். ஏன் இந்த மாற்றம், புதியவர்களை பாராட்டுவதில் ஏன் இந்த பாரபட்சம். என்ன காரணம்?
வேலை பழுவா?
எழுத சோம்பலா?
யூனிகோட் எழுத்துரு பிரச்சனையா?
எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லையா?
கிடைத்துள்ள் அனுமதி போதுமென்று நினைக்கிறீர்களா?
அல்லது, வேறு ஏதும் பிரச்சனைகளா?
பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் உதவுவோமே, பின் ஏன் இந்த தயக்கம்?
புதிய உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? மே முதல் ஆகஸ்டு வரை 4 மாதங்கள் உங்களுக்கு அவகாசம் கொடுத்தாச்சு, இந்த மாதங்களில் ஒரு தமிழ் பதிவு கூட செய்யதவர்களுக்கு 10% வார்னிங் கூட்டப் படுகிறது. உங்கள் அனுமதி ஜூனியர் மெம்பர்ஷிப் ஆக்கப் படும்.
இந்த மாத முடிவுக்குள் நீங்கள் புதிய பதிப்புகள் ஏதும் செய்ய வில்லையென்றால், உங்கள் அனைத்து அனுமதிகளும் திரும்ப பெறப் படும். மாதம் தோறும் 10% வார்னிங் கூடிக் கொண்டே போதும்.
மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தமிழில் புதிய பதிப்புகள் செய்யாத பழையவர்கள், குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது பதித்தால் மட்டுமே மேற்படி அனுமதிகள் பற்றி ஆலோசிக்கப் படும்.
இந்த வேண்டுகோள் உங்களைப் போல் கதைகள் படைக்கும்/படிக்கு அனைத்து படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்காக உங்கள் முன் வைக்கிறேன், நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
Last edited by xxxGuy; 02-09-05 at 04:41 AM.
|