என் கதையை படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து, என்னை தங்க வாசலுக்கு வரவழைத்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த முடிவு ஏற்கனவே நான் எதிர் பார்த்தது தான். என் வெற்றியை சொல்ல வில்லை. யார் வெற்றி பெற்றாலும் எனக்கும் நண்பர் கலேஷனுக்கும் இருக்க போகும் இடைவெளி கண்டிப்பாக நூலளவு தான் இருக்கும் என நினைத்தேன். என் யூகம் வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. லோக நண்பர்களின் ரசனை அப்படி. அதை இருவருமே நிறைவேற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன்.
அடுத்த சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக என்னுடன் இணைய வேண்டும் என நண்பர் கலேஷனை கேட்டுக் கொள்கிறேன். அது என் ஆசையும் கூட. நிறைவேறும் என நினைக்கிறேன்.
நண்பர் கலேஷனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒருமுறை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
|