நானும் நண்பரின் கருத்தை ஆமோதிக்கிறேன். புனிதமாக கருதப்படும் பாடல்களை உல்டா செய்ய கூடாது என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.
அதுமட்டுமல்ல உலகப்பொதுமறை திருக்குறள். நிஜவாழ்வில் குறளை மாற்றி கலாட்டா செய்பவர்கள் பலரை நான் கண்டித்துள்ளேன். ஆழமான கருத்துக்களை, வாழ்வியல் தத்துவங்களை கற்றுக் கொடுக்கும் திருக்குறளும் இங்கே உல்டா செய்து காமமாக படிக்கப்படுவது கண்டு வேதனை அடைந்தேன்.
திருக்குறளை உல்டா செய்வதையும் நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
|