Quote:
Originally Posted by patarasu
இன்னும் ஒரு வாரம் காத்திருப்பேன் (09ம் தேதி ஆகஸ்ட் 2022 மாலை 07 மணி வரை). அதற்குள் எனக்கு தடைக்கு முந்தைய உறுப்பினர் நிலை வழங்க முடியாவிட்டால் தயவு என்னை தளத்திலிருந்து நீக்கிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
.
|
ஒரு வாரம் அல்ல ஒரு வருடம் ஆனாலும் பங்களிக்காமல் இங்கே பலனடைய முடியாது.
இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வேறு எங்காவது வைத்துக்கொள்ளுங்கள் .
இவர் நிரந்தர தடை பெறுகிறார் .
அடுத்து யார்?
பின்னர் பதிந்தது :
Quote:
Originally Posted by patarasu
சிறந்த கதைக்கான ஓட்டளிப்பில் கலந்து கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு இன்று தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் தமிழ்வாசல் அனுமதியுடன். இது அபத்தமான முடிவு.
இது ஆங்கிலத்தில் ”adding insult to injury" என்ற வரிகளை நினைவூட்டுகிறது.
|
அபத்தம் தான், இன்னாகிடிவ் என மாற்றி இமெயில் மூலம் தலைமை நிர்வாகி அவர்களை தொடர்பு கொண்டு பின் கணக்கை திரும்ப நிபந்தனைகள் விதித்து ஏற்கச்செய்து அனுமதிக்காமல் அப்படியே தமிழ்வாசல் அனுமதி கொடுத்தது தவறு தான். அதனால் தான் இம்மாதிரி அபத்தம் என்பதை காண முடிகிறது
Quote:
Originally Posted by patarasu
எவ்வளவோ நேரம் செலவு செய்து தொடர்ந்து ஓட்டளிக்காதவர்ளை இனம்கண்டு ஒரு வாரத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் போதுமான பதிவோ அல்லது பின்னூட்டமோ இல்லாதவர்களுக்கு private message மூலம் குறையைச் சரிசெய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதே பாணியில் இந்த விஷயத்திலும் ஒரு வாய்ப்பளித்திருக்கலாம்.
|
ஒவ்வொரு முறையும் பிரைவேட் மெசேஜ் கொடுத்து உங்களை உசார் படுத்திக்கொண்டே இருப்பது தான் எங்களுக்கு வேலையா?, ஒரு முறை சொல்லும் போதே திரும்ப இம்மாதிரி சொல்ல மாட்டோம், நடவடிக்கை எடுத்து விடுவோம் என்றுள்ளதை ஏன் கவனிக்கவில்லை.
Quote:
Originally Posted by patarasu
தளத்தில் சேர்ந்தது முதல் தற்போது வரை உறுப்பினரின் பதிப்புகள் மற்றும் பின்னூங்களின் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றை வரிப் பின்னூட்டப் பங்களிப்பே போதும் என்ற மனநிலை வந்துவிட்டதா?
|
தளம் தொடங்கி இவ்வளவு நாள் நீங்கள் இங்கே பெற்ற விசயங்களை ஏன் மறந்து விடுகிறீர்கள். சுவாசம் உடலில் இருந்து கொண்டே இருக்க வேண்டும், சுவாசம் இல்லை என்றால் சவம் தான் மனிதன். ஒற்றைப்பின்னூட்டம் இட எங்கும் சொல்லவில்லையே, நீங்கள் தான் அதனை செய்து ஏமாற்றுகிறீர்கள். திறந்த மனதுடன் கதைகளுக்கு விமர்சனம் எழுதவே சொல்கிறோம்.
Quote:
Originally Posted by patarasu
தளத்தில் பதிவிட போதுமான தனிமை கிடைக்காத வாழ்க்கைச் சூழல் உள்ளவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டாமா?
|
தனிமை கிடைக்காதவர் கதை மட்டும் எப்படி படிக்கிறார்கள், கதை படிக்கும் நேரத்தில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் ஓட்டுப்போட ஏன் முடிவதில்லை?.
Quote:
Originally Posted by patarasu
இந்த தளத்தின் நெடுநாளைய உறுப்பினர் என்ற முறையில் ஒரு வாரத் தடைக்குப் பின்னும் வெறும் தமிழ்வாசல் அனுமதி மட்டும் வழங்கப்பட்டதை ஒரு அவமானமாகக் கருதிகிறேன். அடுத்தடுத்த வாசல்களுக்கு அனுமதி எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இதற்குப் பதில் தளத்திலிருந்து நீக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
|
ஒட்டுப்போடாமல் ஏமாற்றியதை அவமானமாக கருதவில்லை, அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது அவமானமாகி விட்டது, இவர் இரண்டே இரண்டு (ஜனவரி மற்றும் மே மாதத்தில் மட்டும்) வாக்கெடுப்பில் மட்டுமே ஒட்டுப்போட்டிகிறார். கடந்த 12 மாதங்களுக்கான நடந்த போட்டிகளில்.