Quote:
Originally Posted by ராசு
இலக்கியத்தில், ஆன்மீகத்தில், சினிமா உலகம் ஆகியவற்றில் நல்ல ஈடுபாடு கொண்ட நல்லவன்1010.
|
Quote:
Originally Posted by anabayan
.ஓரிரு வரிகள் பின்னூட்டமிடுவதே சிரமமாக கருதப்படும் வேளையில் நாலடியார் போல ஒவ்வொரு பின்னூட்டத்திலும் நான்கு வரி கொண்ட கவிதை மணியை கோர்த்து பின்னூட்டமிடுவதில் வல்லவர் நம் கவிச்சக்கரவர்த்தி நல்லவர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அந்த கவிதைகளால் எவ்வளவோ அறியாததையும் புரியாததையும் நாம் தெரிந்து கொண்டோம் என்றால் அதுவும் மிகையாகாது.
|
அத்தகைய நண்பரும் நிர்வாக தோழருமான நல்லவர் 3000 பதிவுகளை தாண்டிவிட்டார்.
(எனக்கும் ஒரு கவிதை எழுதி பாராட்ட ஆசைதான் – முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபடலாமா என்று யாரோ சொல்லுவதால் நான் முயற்சி செய்யவில்லை) அவரை பாராட்டுவோம் வாருங்கள் நண்பர்களே!
மூவாயிரம் முத்தான (கவிதைகள் நிரம்பிய) பதிப்புகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
Quote:
Originally Posted by HERMI
இந்த பதிவுகள் இன்னும் கதைகளாகவும், கவிதைகளாகவும், பின்னூட்டங்களாகவும் பல்கி பெருகி 5000 - மாக மாறவும் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.!!! வாழ்க வளமுடன்.!!
|
நண்பர் மிகவும் அழகாக சொல்லிவிட்டார். விரைவில் அடுத்த மைல்கல்லை தொட வாழ்த்துகள்.