View Single Post
  #7  
Old 03-05-13, 06:57 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,649
My Threads  
நண்பர் காமகேடி என் முதல் கதையிலிருந்து தொடர்ந்து பின்னூட்டம் இட்டு வருபவர். கதையை பதித்ததும் நான் சிலரின் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பேன். அவர்களில் ஒருவர், ரத்தின சுருக்கமாக கருத்தை சொல்பவர் நண்பர் காமக்கேடி. சென்னையில் நேரில் சந்தித்தோம். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களில் இவரும் ஒருவர்.

நான் எழுதிய 'காற்று மழையில் நனையுமோ?' கதையில் முதன் முறையாக அவர் இப்படி சொன்னார்
Quote:
Originally Posted by kamakedi View Post
இடையில் வரும் விட்டலாச்சாரிய மேட்டர் கதையின் சுவாரசியத்தை குறைகிறது.
உடனே அந்த பகுதியை நீக்கிவிட்டேன். கதையை ஊன்றி படித்து தகுந்த கருத்தை பதிப்பவர் அவர். இன்று காலை 5.00 மணிக்கு என் கதை 'சிதறிய சதங்கைகளும் உடைந்த கண்ணாடியும்!' கதையில் இப்படி சொன்னதை படித்ததும் ஒன்றும் புரியவில்லை.
Quote:
Originally Posted by kamakedi View Post
என்னுடைய இந்த லோகத்து பயணத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் இப்படி ஒரு அழகான சீர்திருத்த கதையை படித்தவுடன் என்ன மனம் மகிழ்வடைகிறது.
மீண்டும் இப்போது இந்த திரியை பார்த்ததும் அவர் சொல்லுவது புரிகிறது. உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம். இது 10000 பதிவுகளாக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். இந்த இலக்கையும் விரைவில் அடைய வாழ்த்துகிறேன். அதோடு
Quote:
Originally Posted by MACHAN View Post
இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால், இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன் என்று இந்த தருணத்தில் சூளுரை எடுத்துக்கொள்கிறேன்
Quote:
Originally Posted by HERMI View Post
விரைவில் உங்கள் படைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்.!!!
நண்பர்களில் வேண்டுகோளை (என்னுடையதும்தான்) ஏற்று கதைகளை படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

திரியை பொருத்தமான நேரத்தில் ஆரம்பித்த தோழி புதுமலர் அவர்களுக்கு நன்றி.
Reply With Quote