Quote:
Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.
ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க
|
செந்தமிழ் செல்வரே... தாய்த் தமிழின் தவப் புதல்வரே... தமிழாசானே... இப்பேதையின் வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. உமது தமிங்கில முகமூடியை சற்று விலக்கி உம் செவிகளை சற்று எம் பக்கம் சாய்ப்பீர்களா? இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்...!!!