நிர்வாக உறுப்பினராக அல்லாமல் தளத்து உறுப்பினராக எனது கருத்து.
கதை எழுதுபவருக்கு சன்மானம் அது எப்படி மற்றவ்ர்களால் கவனிக்கப்படுகிறது என்பதே, இது ஆளுக்காள் மாறுபடும். நீங்கள் விருப்பப்பட்டால் இனி என் கதைகள் போட்டியில் வென்றாலும் அதற்கடுத்தவர்களுக்கு சான்ஸ் கொடுங்கள் எனக்கு பரிசு/பதக்கம் தர வேண்டாம் என்று அறிவிப்பதே, ஆனால் மற்றவர்களை அப்படி சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது.
புதியவர் கதைகளுக்கு வாக்கு போடுவதன் மூலமும் பின்னூட்டமிடுவதன் மூலமும், இபணம் பரிசளிப்பது மூலமுமாக அவர்களை உற்சாகப்படுத்தலாமே அன்றி, ஒட்டப்பந்தயத்தில் முன்னரே ஒடியவர்கள் கலந்து கொள்ளும் போது அவர்கள் கால்களை கட்டுப்போடவோ ஓடவே கூடாது என்று சொல்வது முறையன்று. ஒடி முதலில் வந்தாலும் நான் முன்னரே வந்தததால் அடுத்து வருபவருக்கு பரிசு கொடுங்கள் என்று பெருந்தண்மையாக சொல்லாமே அன்றி ஆரம்பத்திலே அவர்களை விலக்கம் செய்தல் சரியல்ல.
__________________
|