முதன் முதலில் அன்பு நண்பர் வி.ஜகன் தன்னுடைய கதையை எழுதிய போது அவருடைய தனிப்பட்ட எழுத்து நடையால் என்னை கவர்ந்தார். பிழைகளை சுட்டி காட்டியபோது கோபிக்காமல் மாற்றங்களை செய்தார். அப்புறம் சற்று காலம் கழித்து 'அந்தப்பக்கம்' அடியெடுத்து வைத்தார். அப்போது அவரின் கதைகளை படிக்கும் சான்ஸை இழந்தேன்.
இருந்தாலும் இவர் அங்கு சென்று ஸ்டார் ரைட்டர் பட்டத்தை பெற்றப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது வாசகர் சவால் 53ல் இவருக்கே உரிய நடையில் "திருமண விழாவுக்கு கணியூர் வந்த திரி புர சுந்தரி" என்ற கதைய எழுதியதை படித்தப்போது சந்தோஷப்பட்டேன்.
5000 பதிப்புகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இவர் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளையும் அற்புதமான கதைகளையும் பதித்து கூடிய விரைவில் 10000 த்தை தாண்ட வாழ்த்துகிறேன்.
|