Quote:
Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.
ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க
|
ஆதி அண்ணாச்சியையும்( மன்னிக்கவும்..அண்ணனையும்..ஏனென்றால், தாங்கள் கேட்பீர்கள்..அது என்ன அண்ணாச்சி..என்று..), நண்பர் ஹயாத்-தையும் ஏன் இழுக்கின்றீர்கள். அதற்கு முன் நான்...எனக்குத்தெரிந்த விவரங்களோடு..உங்கள் முன்..
வாங்க சிங்கைத்தமிழ் நண்பரே அருள்..
அருமைத்தோழி பீனா எழுதியது
பேச்சுத்தமிழ். அதைத் தாங்கள் ஏன் குறை கூறுகின்றீர்கள்.( இதே தான் அருமைத் தோழி பீனாவுக்கும்..ஏனென்றால் சூரியத்தமிழன் ஒரு உண்மைவிளம்பி..)
ஒரு சிறு விளக்கம். அதாவது...தமிழில் பல வகைகள் உண்டு..
முதலில் உங்க ஊர்த்தமிழைச் சொல்லுகிறேன் (இல்லையென்றால் நீங்க கோபம் கொண்டுவிடப் போகின்றீர்கள்). சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ், இலங்கைத்தமிழ், மொரீஷியஸ் தமிழ், இந்தியாவில் தமிழ்நாட்டில் பல தமிழ்கள்(சென்னைத்தமிழ்,கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ்...). இப்படிப்பல தமிழ்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பழங்கால சங்கத்தமிழில் இருந்து காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப.. மருவி வந்த தமிழ்களே.
ஆகவே, பேசும்போதும்..எழுதும்போது..அவரவர் அவரவர் தமிழையே பின்பற்றுவார்கள்.
உங்க quote-ஐப் பாருங்கள். என்ன பதித்திருக்கிறீர்கள்?
ஒண்ணா இருக்க கற்றுக்கணும்:அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
எழுத்துத்தமிழில் பதித்திருந்தால் இதே வார்த்தைகளை " ஒன்றாக இருக்க
க் கற்றுக்கொள்ள வேண்டும்: அந்த உண்மையை
ச் சொன்னால் ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றுதானே பதித்திருக்க வேண்டும்.( அதுவும் அந்த "க்", "ச்" எல்லாம் சரியாகப் பார்த்து). தாங்கள் அப்படிப் பதிக்கவில்லையே..என்ன காரணம்? தாங்கள் தமிழ் பழகிய விதம் அவ்வாறு..
அதனால் மேலே கூறப்பட்ட தமிழ்களில் ஒன்றைவிட ஒன்று தாழ்ந்ததோ..அல்லது உயர்ந்ததோ அல்ல.
அப்பப்பா..மூச்சு வாங்குதுங்கோ....மக்களே அமைதி.. அமைதி..
தமிழ்த்தாய் மக்கள் நாமென்போம்..
வணக்கம்..
=========================================================
பதித்த முதல் பதிப்பிலேயே இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வித்திட்ட "தமிழ்க்கிறுக்கன்" எங்கீங்க போனார்? ஆளு அட்ரஸையே காணமே...