என் படைப்புகளிலும் பின்னூட்டங்களிலும் நிறைய ஆங்கில வார்த்தைகள் த்மிழில் 'ஒலிமாற்றம்' செய்யப்பட்டிருக்கும். இதறகுக் காரணம் மணிப்பிரவாளமாகப் பேசிப்பேசி எழுதும்போதும் அப்படியே வருகிறது. தனித்தமிழில் பொதுவான இடங்களில் பேசிப்பாருங்கள், அனேகமாக அனைவரும் உங்களை 'ஒருமாதிரி' பார்ப்பார்கள். (உ.ம்.: 'நான் ஒரு பணவிடை அனுப்ப விரும்புகிறேன். அஞ்சலகம் எங்கே இருக்கிறது?') இயல்பாக எழுதவேண்டுமா, செயற்கையாக எழுத வேண்டுமா என்பது கேள்வி.
அன்றாடம் பேசுகையில் பயன்படுத்தும் பல ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் கிடைப்பதில்லை. இன்னும் பல்வற்றுக்கு யோசித்துக் கண்டுபிடிக்க வேண்டும். இது நேரம் எடுத்துக்கொள்ளும் செயல். தேவைதானா?
என்னாலும் தூய தமிழில் எழுத முடியும் --.ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல் - (1). அது இயற்கையாக இருக்காது; (2) கால விரயம் ஆகும்.
மன்னியுங்கள், நான் என் எழுத்துப் பாணியை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
|