வித்தியாசமான 'ஜானரில்' எழுதி முதல் பரிசு வென்ற ரேவதிக்கு வாழ்த்துக்கள்...உண்மையிலேயே வித்தியாசமாகத்தான் இருந்தது...கதையில் திவ்யாவின் போக்கு புரியாமலே இருந்தது பல நேரம்...வழக்கமாக கணவனை மோசமானவனாகவே காட்டுவார்கள். இந்த கதையில் திவ்யா தான் மோசமாக இருந்தாள்.
அம்மாவும் அவள் தோழியும்.அருமை. கதை பற்றி பின்னூட்டங்களில் ஏகமாய் சிலாகித்து விட்டேன்.
மன்மதனின் கதை இயல்பாக ...மனதுக்கு நெருக்கமாக இருந்தது...ஊரும் தெரிந்த ஊராக போய்விட்டபடியால்...காட்சிகள் கண்ணுக்குள்ளேயே நின்றன.
இன்னும் சில கதைகள் நினைவில் நின்றன...அப்பாவின் அக்கா சுமித் ரா, நங்கூரம் போன்றவை...அவைகள் இன்னும் பெரு வெற்றி பெரும் அளவுக்கு நீளமும் அடர்த்தியும் பெற வேண்டி இருப்பதாலேயே வாக்குகள் குறைவாய் கிடைக்க பெற்றன என்பது எனது எண்ணம். அவர்களும் நீண்ட நெடுந்தொடர்கள் படைக்க வேண்டுகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
|