அன்பு நண்பருக்கு
Quote:
Originally Posted by rojaraja
மேலும் ஒரு நூல் என்பது அது சார்ந்த பாதிப்புக்குகள் முழுவதும் அதில் இருப்பது தான் முறை
|
இந்தமாதிரியான முறைகளை வேறு தளங்களில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த தளத்திற்கென்று ஒருசில முறைகள் உள்ளன அதை விளக்குவதை விட நீங்கள் ஏற்க்கனவே பதிந்தவர்களின் கதைகள் எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
Quote:
Originally Posted by rojaraja
ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்குவது விரயம் மற்றும் ஒழுங்கு படுத்துவதும் கடினமாக இருக்கும்.
|
ஒழுங்கு படுத்துவதை பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை நண்பரே. அதற்க்கென நிர்வாக உறுப்பினர்கள் உள்ளனர், நீங்கள் விதிமுறைகளின் படி ஒரு கதையின் பதிப்பு 50 வரிகளுக்கு குறையாமல், எழுத்துப்பிழைகளை கழைந்து சரியாக திரிக்கு தலைப்பிட்டு பதிப்பீர்களாயின் உங்கள் கதையின் பாகங்களை link செய்து கொடுக்க நிர்வாக உறுப்பினர்கள் உதவுவார்கள்.
Quote:
Originally Posted by niceguyinindia
ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது
|
மற்றும் நீங்கள் பதிந்த ஒரு பாகத்திற்கு படிப்பக்வர்கள் தனியாக பின்னூட்டமிடவும் முடியாது
உதாரணமாக நீங்கள் தற்பொழுது பதிந்திருக்கும் கீர்த்திகா மேம் இன் முதல் பகுதிக்கு பின்னூட்டம் இடவேண்டுமென்று வாசகர்கள் நினைத்தால் அது உங்கள் இறுதிப் பதிப்பிற்குப் பின்னர்தான் போஸ்ட் ஆகும். அதனால் அந்தப்பகுதிக்கான பின்னூட்டங்களின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பதிப்பிற்கான பின்னூட்டமாகவும் அமைந்துவிடும்.
தளத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் பரிந்துரைக்கின்றேன் .... இரு வரிச் சந்தேகங்களாயின் புதுத் திரி திறப்பதை விட நிர்வாக நண்பர்கள் யாருக்கேனும் தனிமடல் அனுப்பி வினாவுவது சிறந்தது .