ஏற்கனவே இத்தளத்தில் உள்ள விதிமுறைகள் கடுமையாக உள்ளன. நீங்கள் சொல்லும் 15 கதை விதிமுறை பல உறுப்பினர்களுக்கு மிகவும் சிக்கல் மிக்கதாக இருக்கும். இப்படி கட்டாயப்படுத்தி கதை எழுத வைத்தால் கதைகளின் தரமும் நீளமும் குறையும் என்பது என் கருத்து. பிறகு, எல்லாராலும் கதை எழுத முடியாது..அது ஒரு திறன் தான் என்பதநை நீங்கள் அறிவீர்கள். நானும் கதை எழுதுகிறேன் என்று எல்லாரும் ஆரம்பித்தால் அப்புறம் குப்பைகளை களைவதே மேற்பார்வையாளர்க்கு பெரிய வேலையாகிப்போய் விடும். விமர்சனங்களின் தரத்தையும் நீளத்தையும் தற்பொழுது உள்ள விதிகள் நன்றாகவே கட்டுப்படுத்துகின்றன. அதில் மாற்றம் தேவையில்லை. பழைய உறுப்பினர்களுக்கு எத்தனையோ காரணங்களுக்காக ஈடுபாடு காட்ட முடியாமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பதவியை பறிப்பது சரியாகாது. வேண்டுமானால் அன்பு வேண்டுகோள் விடுக்காலாம். அவ்வளவே. ஆனால், நிறைய கதைகள் எழுதினால் அதன் மூலம் நமது கட்டணத்தளத்திற்கு ஆதரவு கூடும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
|