நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.
நான் எழுதும் கதைகளில் வரும் வர்ணனைகளிலும் , சில வாக்கியங்களிலும் , காட்சி அமைப்புகளிலும் நான் ரசித்து படித்து மனதில் பதிந்த கதையின் தாக்கம் தெரிகிறது. சில சமயம் நெருடலாக உள்ளது. அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. இதற்காகவே அதிக நேரம் எடுத்து கொள்கிறேன். தனித்துவமாக தான் எழுத முயல்கிறேன். ஆனாலும் படித்த கதைகளின் தாக்கம் இருக்க தான் செய்கிறது போல் உணர்கிறேன். இதனை சரியாக்க ஏதேனும் வழி உள்ளதா?
|