இந்த தகவலை நீங்கள் நேற்றே பதிந்திருக்கலாமே நண்பரே. எதற்கு இன்றைக்கு வரைக்கும் காத்திருக்கவேண்டும்.
நேற்றைக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைந்த தினம் என்பது உங்களுக்கு தெரியுமா ? அதற்காகவும் சிறப்பாக எதுவும் நடக்கவில்லை தான். அதற்காக வருத்தப்படுகிறீர்களா?
நேற்றைக்கு விஸ்வநாதன் ஆனந்தின் பிறந்தநாள் என்பது உங்களுக்கு தெரியுமா ? செஸ் விளையாட்டில் இந்தியாவை அசைக்கமுடியாத உயரத்துக்கு கொண்டு சென்றவருக்கு சிறப்பாக எதுவும் செய்யப்படவில்லை தான். அதற்காக வருத்தப்படுகிறீர்களா ?
இன்றைய மீடியாக்களுக்கு மக்களை விட விளம்பரங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வருகின்றன என்பதுதான் முக்கியம். அது போலவே நமக்கு சில முக்கியமாக தெரியும் அளவுக்கு மற்றவர்கள் தெரிவதில்லை. இதெல்லாம் சகஜம் நண்பரே. இதற்கெல்லாம் வருத்தப்படுவதால் என்ன ஆகப்போகிறது. நீங்கள் பாரதி பிறந்தநாளை அடுத்த வருடம் மறக்காமல் நினைவில் கொண்டு அவருடைய கருத்துக்களில் ஒன்றையாவது செயலாக்க முயலுங்கள்.
|