என் கல்லூரி காலங்களில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன், தனிப்பட்ட முறையில் அவர் மேல் எனக்கு மரியாதை உண்டு.
அவரின் கடைசி கடிதம் மனதை உருக்குவதாக உள்ளது ஆனால் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும், அவரின் தற்கொலை முடிவை என் மனது ஒத்துக் கொள்ளவில்லை.யாரும், யாரையும் நம்பி இல்லை எனவே அவர் போராடி வாழ்ந்திருக்க வேண்டும், இன்னும் பல நூல்கள் எழுதி இருக்க வேண்டும்,அதில் தனிமை எவ்வளவு கொடுமை , மனைவியை பிரிந்து நான் எப்படியெல்லாம் போராடி வாழ்ந்து வருகிறேன், தன் காதல் மனைவியின் நினைவுகளே தனக்கு துணையாக உள்ளது என்றெல்லாம் தனது புத்தகத்தில் எழுதியிருக்கலாம், அது இதுப்போல வாழும் பலருக்கு உதவியாக இருந்திருக்கும்.
மனைவியை இழந்தவர்கள் மற்றும் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இறந்தபிறகு வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களைத்தான் நாம் தியாகி , நெஞ்சுறுதி கொண்டவர் எனலாம், தனக்கு பிடித்த ஒருவரை இழந்து விட்டால் தானும் இறந்து விட வேண்டும் என அனைவரும் நினைத்து விட்டால் என்னாவது ? பாதி மக்கள் தொகை அல்லவா குறைந்திருக்கும்.
ஒருவரின் மரணம் (சுஜாதா மரணம்) அவருக்கு புகழைத் தேடி தருவதாக இருக்க வேண்டும் மாறாக இழுக்கை தேடி தரக்கூடாது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.
அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
|