உங்களுடைய ஆண்டியோடு ஆத்துக்கு போலாமா என்ற கதைக்கு பின்னூட்டமாக நான் எழுதியது ஒன்றும் சும்மா இல்லை, என்பது மெய்ப்பட்டு இருக்கிறது.
உங்களுள் உறைந்து, உங்கள் எழுத்தில் ஜீவனும் உணர்வுகளுமாய் வெளிப்படும் உங்கள் திறன் இன்று குன்றில் இட்ட தீபமாய் வெளிச்சத்து வந்திருக்கிறது.
என் மனமார்ந்த பாராட்டுக்கள் மோகன். வாழ்க, வளர்க.
மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.
தகுதி அறிந்தே தட்டிக்கொடுத்த அன்பர்கள் அனைவர்க்கும், என் மனமார்ந்த நன்றி.
தகுதி படைத்தோரை உயர்த்தும் வாய்ப்பாக இப்போட்டியினை நடத்திய நம் பாசமிகு தள நிர்வாகிகளுக்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.
என்னையும் தொடர்ந்து ஆதரிக்கும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
|