உலகளாவிய சிறுகதை போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றமைக்கு முதற்கண் என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர் ராஜேஷிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நண்பர் சுப்பு எழுதியது போல்... நிறைய உதவிகள் எனக்கு செய்திருக்கிறார். எழுத்தில் பிழை என்றாலோ அல்லது ஏதாவது உதவி என்றாலோ தனிமடலில் எழுதினால் உடனே என் எழுத்துகளை திருத்தி அன்புடனே விளக்குவார். இப்படி செய்யவேண்டும் இப்படி செய்யக்கூடாதென்று. இதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த நெருங்கிய நட்பாகிவிட்டார் நண்பர் ராஜேஷ்.
அடுத்து நண்பர் ராஜேஷ் அவர்களின் நேர்மை... போட்டியில் சிறப்பு கதைகள் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் ஒன்று என்னுடையது என்று சொன்ன அவருடைய நேர்மை.
காரணமில்லாமலேயே நண்பர் ராஜேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நல்ல குணங்கள் அவருடைய கதைகளில் மெசெஜாக வரும். அதோடு உதவும் குணமும்.. நம் தளத்தில் நான் எல்லோரிடமும் கண்ட ஒரு அற்புதமான விஷயம் இது. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும், நன்றாக எழுதினால் ஊக்குவிப்பதும்.. பொறாமை உணர்வின்றி எல்லோரும் ஒருவருக்கொருவர் பாராட்டுவதும், தவறு செய்துவிட்டால் இப்படி செய்துவிட்டேன் என்று உணர்ந்து எழுதுவதும்...
பெருமைக்கொள்கிறேன். நல்லோர் நிறைந்த இந்த தளத்தில் நானும் இணைந்தமைக்கு.
காமலோகத்தளத்துக்கு தான் நன்றி சொல்லவேண்டும் இனிய நல்லவர்கள் நிறைந்த இடத்துக்கு நான் வந்ததற்கு..
மீண்டும் மீண்டும் சாதித்துக்கொண்டும் வெற்றிகள் பெற்றுக்கொண்டும் இருக்க நண்பர் ராஜேஷை மனமார்ந்து வாழ்த்துகிறேன்.
|