என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். லோகத்தில் இணைந்த 2006ம் வருஷத்திலிருந்து முயற்சித்து பல கதைகளை பதிந்தாலும் ஒரு கதை கூட முழுவமாக முடிக்காமல் இருந்தேன். ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒரே ஒரு கதையை மூன்று பாகங்களுடன் முடிக்க முடிந்தது.
2009ல் ஜாக்கின் சவால் கதையில் ஆறு பாகங்களை கொடுத்துவிட்டு நேரமின்மையின் காரணத்தால் தொடராமல் விட்டு விட்டேன். ஆனால் என்னுடைய பின்னுட்டங்களாலேயே 2010ல் சில்வர் மெம்பராக வந்தேன்.
2010 ஏப்ரலில் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக நேரம் கிடைக்கவே. இதோ இப்போது மே மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்டேன். பில்லாவின் வா.ச.எண். 44ல் ஒன்பது கதை பதிந்துள்ளேன். நின்றுபோன பழைய பாகங்களை தூசி தட்டி தொடந்து எழுதி முடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் தங்க வாசலை அடைவேன். அதன் பின்பும் எழுதுவேன்.
ஆனால் கடைசி வரை இதே வேகத்தில் தொடர்ந்து எழுதுவேன் என்று சொல்ல முடியாது. நேரமும், சந்தர்ப்பமும் ஒத்துழைக்க வேண்டும். என்னை போல இப்படி பலர் ஆசையிருந்தும் வேலைப்பளுவில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பின்னூட்டம் இடுவதே பெரிய வேலை. இன்னும் பலருக்கு கோர்வையாக கதை எழுத வராது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கதை பதிந்தால் மட்டுமே பதவி உயர்வு என்று லோகவாசிகளை நிர்பந்திக்காமல், பின்னோட்டத்திற்கும் பதவி உயர்வு வழங்குவதே சரி.
|