பதிவுகளை திருத்துதல் 10 நாட்கள் மட்டும் - விளக்கம்
நம் தளத்திலே ஒருவர் தத்தம் பதிவுகளை அவர் இது நாள் வரை எப்போது வேண்டுமானலும் திருத்தலாம் என்றிருந்தது, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய நடைமுறைப்படி, ஒருவர் பதிந்த பதிப்பு அவரால் அடுத்த 10 தினங்கள் மட்டுமே திருத்த(எடிட்) செய்ய இயலும், பின்னர் அந்த வசதி இருக்காது.
அப்படி அவசியம் திருத்த வேண்டும் என்றால் நிர்வாக உறுப்பினருக்கு தனிமடலிட்டு திருத்தி கொள்ளலாம். இதனால் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருந்தவை களையப்பட்டது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.
1) பதிப்பு ஆரம்பித்த ஒருவர் பின்னாளில் அதனை திருத்தி விதிமுறை மீறியதை பதிந்து விடுகிறார்கள். இது நாம் அடிக்கடி பார்க்க இயலாத திரி என்றால், பின்னர் எவரேனும் ஒருவர் பார்க்கையில் அது தெரிய வருகிறது. இதற்கு உ.தா. சர்ச்சையான கதை ஒன்றை ஒருவர் பதிந்தது தெரிந்து அதனை பூட்டி நீக்கிய பின், அந்த கதாசிரியர் அந்த கதையை கொண்டு சென்று தன் பழைய பதிப்புகள், பழைய கதைகளின் கீழே பிற்சேர்க்கையாக பதிந்து வைத்திருந்தார். இதனை பின்னர் கண்டவர்கள் சொன்ன பின்னரே நடவடிக்கை எடுக்க முடிந்தது.
2) சிலர் தவறுதலாகவோ அல்லது மனம் மாறியோ, தான் பதிந்தவற்றை நீக்கி வெற்றுப்பதிவாகவோ அல்லது நீக்கப்பட்டது என்றோ பதிந்து செல்கின்றனர். இதனால் பின்னர் அந்த திரி முழுதும் பார்ப்பவர்களுக்கு என்ன ஏது என்றே தெரிய மாட்டேன்கிறது, எனவே அந்த மாதிரி பின்னர் தன்னிச்சையாக பதிவுகளை நீக்குபவர்களை கட்டுப்படுத்த இது அவசியமாகிறது.
3) இம்மாதிரி பதிவுகளை பின்னர் திருத்தும் போது முந்தைய பதிவு தற்காலிகமாக பின்னர் பயன்படுத்திக்கொள்ள மென்பொருளால் சேமிக்கப்படுகிறது, இது அடிக்கடி திருத்துபவர்களால் மிக நீண்டதாகிறது. இதுவும் குறிப்பிட்ட கால அளவு தான் திருத்த முடியும் என்பதால் அந்த கூடுதல் சுமை குறைகிறது.
நம் தளம் எப்போதும் கட்டுப்பாடுகளையும் புதுப்புது விதிமுறைகளையும் தானே கொண்டுவருவதில்லை, அது அவசியம் என்று கருதப்படும் போது ஏற்படுத்துவது அவசியமாகிறது.
இது குறித்து உங்கள் கருத்து விமர்சனம் இருந்தால் இந்த திரியிலே தெரிவித்துக்கொள்ளலாம்.
===================== ===================== ====================
பின்குறிப்பு: முதலில் பதிந்திருந்த திரி என்ற வார்த்தைகள் அனைத்தும் நீக்கி/மாற்றி பின்னர் பதிக்கப்பட்டுள்ளது.
__________________
Last edited by asho; 19-04-14 at 02:57 PM.
|