மச்சானின் தொடர்ச்சிகளை வாசித்து பின்னூட்டங்கள் பதித்து இத்தனை வாக்குகளையும் அள்ளிக் கொடுத்த எனது நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உண்மையிலேயே இந்த முடிவை பார்த்து மச்சான் கொஞ்சம் அதிர்ந்துதான் போய் விட்டேனுங்கோ..! காரணம், நண்பர் snehan அவர்களும் நண்பர் knantham அவர்களும் பிரமாதமாக தங்களின் தொடர்ச்சிகளை எழுதி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக snehan அவர்களின் தொடர் ஒரு திரைப்படத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்தது போலவே மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது.
இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு எனக்கு முதல் பரிசாக கிடைக்கவிருக்கும் 3000 இ பணங்களையும் தலா 1500 வீதம் என் இரு பங்காளிகளுக்குமே பங்கிட்டுக் கொடுக்கிறேன். அதற்கு அனுமதி வழங்குமாறு நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை வாழ்த்திய, இனிமேல் வாழ்த்தவிருக்கும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மச்சானின் இதயம் கனிந்த நன்றிகள்.
|