View Single Post
  #1  
Old 27-02-09, 05:31 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
தமிழில் தவறின்றி எழுத ஆசையா???

நண்ப,நண்பிகளே....
நம்மில் பலர் எழுதும் போது ள,ல.ண,ன ற,ர ஆகிய எழுத்துக்களின் வித்தியாசம் தெரிந்தும்,உச்சரிப்பு,ஓசை,ஒலி எப்படி வரும்,வரணும் என்பதில் குழம்பி சில இடங்களில் தவறான எழுத்துக்களை உபயோகிப்பதால் வார்த்தையின் அர்த்தமே மாறி விடுகிறது..

காலையில் பால் கறந்து கொண்டு வா என்று சொல்வதற்கு பதிலாக,
காளையில் பால் கறந்து கொண்டு வா என்றால்?
உதாரணத்துக்கு...வெள்ளம்.வெல்லம்.எவ்வளவு பெரிய வித்தியாசம்?
அதே போல.....நீளம்,நீலம்.அரை,அறை.கள்,கல் சிரை,சிறை.மனம்,மணம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
கீழே நான் தரும் வார்த்தைகளை சொல்லி பாருங்கள்...

குணம்,பணம்,ரணம்,எண்ணம்,கிண்ணம்,எண்,கண்..
இதில் உள்ளதை பெரிய ண,அல்லது வல்லின ண என்பார்கள்
இதை சரியாக உச்சரிக்க நம் நாக்கு வாயின் மேல் நடுபகுதியை தொட்டல் சரியான ஓசை,ஒலி வரும்

அடுத்து...
மனம்.சினம்.இனம்,தினம்,சின்னம்,கன்னம்,மின்னல்,பின்னல்,இன்னல்.
இதில் உள்ளதை சின்ன ன,மெல்லின ன என்பார்கள்.
இதை சரியாக உச்சரிக்க நாக்கு நம் மேற்பற்களின் முன் இரண்டு பற்களை தொட்டால் சரியான ஓசை,ஒலி வரும்.

அடுத்து...
எலி,கிலி,புலி,வால்,கால்,சொல்.நில்.கோலம்.பாலம்.
இதில் உள்ளதை சின்ன ல,மெல்லின ல என்பார்கள்.
இதை சரியாக உச்சரிக்க நாக்கு நம் மேற்பற்களின் முன் இரண்டு பற்களை தொட்டால் சரியான ஓசை,ஒலி வரும்.

காளை,வேளை,எள்,தேள்,தாள், வாள்,தாளம்,கள்ளன்,குள்ளன்,உள்ளம்.
இதில் உள்ளதை பெரிய ள,அல்லது வல்லின ள என்பார்கள்.இதை சரியாக உச்சரிக்க நம் நாக்கு வாயின் மேல் நடுபகுதியை தொட்டல் சரியான ஓசை,ஒலி வரும்.
அடுத்து...
மரம்,ஜுரம்,சிரம்,தூரம்,பாரம்,ஏரி,காரம்,சாரல்,தூரல்.
இதை சின்ன ர,மெல்லின ர என்பார்கள்.
இதை அதிகம் அழுத்தாமல் மென்மையாக உச்சரிக்கவேண்டும்.

அறம்,புறம்,இறைவன்,பிறை,நிறை,குறை,மறை,கறை,துறை.
இதை பெரிய ற,அல்லது,வல்லின ற என்பார்கள்..
இதை சற்று அழுத்தி உச்சரிக்கவேண்டும்..
இதில் கவனிக்க வேண்டியது. ற,ர வின் உச்சரிப்பில்,ஓசையில்,ஒலியில் பெரிய வித்தியாசமில்லை.

இதை நான் எழுதியதால் நான் எழுதும் போது தவறே இருக்காது என்று நான் சொல்லவில்லை.

நல்ல தமிழில் நண்பர்கள் எழுதவும்,தவறின்றி எழுதவும் தான் இதை எழுதியுள்ளேன்.
நல்ல தமிழ்,தமிழ் வார்த்தைகள் கற்க ஆசை,ஆர்வமுள்ளவர்கள் மக்கள் தொ,காட்சி பாருங்கள்,குறிப்பாக சனி,ஞாயிறுகளில் ஒளி பரப்பாகும் தமிழ்பேசு,தங்ககாசு நிகழ்ச்சியை பாருங்கள்..

நண்ப,நண்பிகளின் மேலான ஆலோசனைகள்,மற்றும் எண்ணங்களை வரவேற்கிறேன்..
சாஜித்...
Reply With Quote