View Single Post
  #5  
Old 02-11-21, 06:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,739
My Threads  
நிர்வாக நடவடிக்கை பற்றிய இந்த திரிக்கு பின்னூட்டம் எழுத வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

குறை என்றால் உடனே பதில் எழுதியிருந்திருப்போம், நிறை என்பதால் மற்ற உறுப்பினர் பதிப்பு கண்டு பதிக்கலாம் என்று இருந்தோம்.

நிர்வாக குழு சார்பாக எனது பதில்.

சென்ற வருடத்தில் இதே நேரத்தில் தளத்திலே அப்போதைக்கு ஆன் லைனில் இருப்பவர் எண்ணிக்கை சராசரியாக 4 (கொரோனா இரண்டாவது அலை ஆரம்பிக்கும் முந்தைய சூழ்நிலை). சராசரியாக பதிக்கப்பட்ட திரிகள் 2.5(இரண்டோ அல்லது மூன்றோ). பதிக்கப்படும் பதிப்புகள் எண்ணிக்கை 7 என இருந்தது. இதிலிருந்து தளத்தை உற்சாகப்படுத்த வழிகள் ஆராயப்பட்டது. நிறைய உறுப்பினர்கள் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளினால் சரியாக பங்களிக்கவில்லை, இருப்பவர்களும் மனச்சோர்வில் இருந்தனர். அடுதடுத்த மாதங்களில் இன்னும் சோர்வு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் உறுப்பினர்களிடையே ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்த மாதக்கதைகளுக்கு வாக்களிக்காதவர்களை தமிழ்வாசலுக்கு அனுப்ப நினைத்தோம். இந்த மாதிரி செய்ய ஆறு ஏழு வருடங்களாகவே வாக்கெடுப்பு திரியில் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை செய்து வந்தோம். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படுத்தினோம்.

முதலில் 10 பேருக்கு மேல் தமிழ்வாசலுக்கு இறக்கி விடப்பட்டனர். அடுதடுத்த மாதத்தில் இன்னும் பலர் இறக்கி விடப்பட்டனர். ஒரு சிலர் தனி திரி ஆரம்பித்து தாங்கள் ஏன் தகுதி இறக்கம் செய்யப்பட்டோம் என்று ஆதங்கப்பட்டனர், ஒருவர் விளக்கம் பெற்றவுட்ன திரும்ப பதிவெல்லாம் செய்ய மாட்டேன் என்னை நீக்கி விடுங்கள் என்றும் பதிந்திருந்தார்.

அதற்குப்பின் தமிழ்வாசலுக்கு பதில் இன்னாக்டீவ் மெம்பர் என மாற்றிய பின்னர் தளத்து இமெயிலில் திரும்ப பங்களிப்பதாக உறுதி சொன்ன பின்னரே அவர்கள் பதிப்புகள் இபணம் நீக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வளவும் எதற்கு என்றால் தளத்தை சிறப்பாக நடத்தவே, சில பழைய உறுப்பினர்கள் அவர்கள் தனிப்பட்ட வேலைப்பளு, சூழல்கள் காரணமாக பதிவுகள் ஏதும் தருவதில்லை. 3 மாதத்திற்கு ஒரு பதிவு மட்டும் பதிந்து செல்கின்றனர். அவர்கள் முந்தைய உழைப்பை கணக்கில் கொண்டு நாமும் அவர்களை பதிவுகள் பதிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை.

புதியவர்களில் சிலர் இரட்டை கணக்கு வைத்துகொண்டு ஏதாவது நேர்ந்தால் திரும்ப தளத்தில் வலம்வர இன்னொரு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் லிஸ்டும் கைவசம் இருக்கிறது.

இன்னும் சில உறுப்பினர்கள் தத்தம் நண்பர்களிடம் பாஸ்வேர்ட் கொடுத்து தளத்தில் அவர்களை ஏதும் பதிந்து விடாதே கதை படித்து இன்புறு என்று தருகிறார்கள் என்றும் தெரிகிறது.

இப்போது இம்மாதிரி நடவடிக்கையால் அவர்கள் கணக்கு முடக்கப்பட்டு திரும்ப அவர்கள் பங்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்போது தளத்திலே தினமும் 15 பேராவது ஆக்டீவாக உள்ளனர் தினமும் 150 பேருக்கு மேல் தளம் வருகிறார்கள், சராசரியாக தினமும் 25 பதிப்புகள் 4 திரிகள் உருவாகின்றது. மகிழ்ச்சியாக உள்ளது. இதில் எந்த சமரசமும் யாருக்கும் செய்ததில்லை என்பதால் தான்.

திரி ஆரம்பித்த நண்பருக்கு 1000 இபணம் பரிசளிக்கிறேன். திரியிலே கருத்து பதிந்த நண்பர்களுக்கு நன்றி.

ஆட்சேபனையான கருத்து இருந்தாலும் பதியுங்கள், நண்பர்களே. அதனால் ஒரு கருத்து ஒருமித்தல் கிடைக்க கூடும்.
__________________
Reply With Quote