Quote:
Originally Posted by BILLA
ஆதியண்ணே... 4000ம் பதிப்புக்களை தாண்டியமைக்கு என் வாழ்த்துக்கள். இந்த திரியை துவங்கி நண்பர்களுக்கு வாழ்த்த வழிவகை செய்த நண்பர் தமிழ்20072000 க்கு என் நன்றிகள்.
|
நீங்கள் திரி துவங்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், (என்னை போலவே இருக்கிறார் பில்லா
)
Quote:
Originally Posted by vaaliban
தங்க வாசல் அசைபடம், நிழற்படம் ஜொள்ளுவிடுவதிலும் வல்லவர் !
|
அங்கே அவர் ஜொள்ளு விட்டதை ரசித்து படித்து ரசிகராயிட்டு, இங்கே போட்டு கொடுக்கிறீர்களா?.
ஆதி-யில் நானறிந்த முதல் அட்மின் நண்பர்
வள்ளுவராவது இரண்டு வரியில் தான் சொல்லவந்ததை குறளாக படைத்திருப்பார், ஆனால் ஆதி ஒருவரி தான் பதிப்பார்(மனிரத்தினம் பட டயலாக் மாதிரி), ஆனால் படிப்பவர் நிறைய அர்த்தம் பெறுவர்.
மாற்றுக்கருத்து என்றாலும், ஒத்த கருத்து என்றாலும் பதிலுக்கு ஒரு பதில் உடனுக்குடன் பதிந்து போய்விடுவார்.
ஆதி ஒரு திரியில் பதிந்தால், பிறகு அதில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.
சமயத்தில் இவரே (எப்பவாவது திரி ஆரம்பித்து) அனைவரையும் எட்டி பார்க்க செய்வார்.
தனிமடலில் புதியவர், பழையவர் என அனைவருக்கும் மடல் அனுப்பி கதைகள் பதிக்க தூண்டுவார். ரெம்ப நாட்களாக பங்களிக்காதவரிடம் பதிக்க தூண்டுவார்.
4000 பதிவுகளை தாண்டிதற்கு வாழ்த்துக்கள், இந்த வருடம் முடிவதற்குள் 5000 முடிக்கவும் வாழ்த்துக்கள்.