நமது தளத்திலே 100 பாகம் கதை எழுதிய
போத்தன் ராஜாவை வாழ்த்த இந்த திரி
இங்கே ஒரு உண்மையை சொல்ல வேண்டும், நான் இந்தக்கதையின் எல்லா பாகமும் படிக்கவில்லை.. கடைசி 25-30 பாகங்கள்தான் படித்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை எந்த பாகத்திலிருந்து படித்தாலும் புரிகிற மாதிரிதான் இருக்கும். அந்த அளவுக்கு சிம்பிளான ஒரு வரி கதைக்கருதான் .
ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த சம்பந்த முதலியார் ஆரம்பத்தில் எடுபிடியாக இருந்து,கணக்கு பிள்ளையாக வேலைசெய்து படிப்படியாக முன்னேறி பணக்காரர் ஆகிறார். இந்த நேரத்தில் பல பெண்களோடு தொடர்பு ஏற்பட்டு மன்மத லீலையை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட பெண்கள்..அவருடைய மனைவி கிளியாம்பாளிடம் மனத்தாங்கல். குழந்தை இல்லை. இறுதியில் அவருடைய கடைக்கு வேலைக்கு வரும் தனம் என்ற அவரைவிட சற்று வயது கூடுதலான பெண் அவருடன் கூடுகிறார். மனைவியோடு சமரசம் செய்துவைக்கிறாள். குழந்தைக்காக 2ம் திருமணமாக அவருடைய முன்னால் கீப்பை (கோதை) திருமணம் செய்து வைத்து குழந்தை பெற வைக்கிறாள். இறுதியில் 2 மனைவிகளும் சேர்ந்து தனத்துக்கும் தாலி கட்ட வைக்கின்றனர்.
இதுவரை கதை படிக்காதவர்கள் இந்த திரியில் வாழ்த்தும் முன் அவரின் 100ம் பாகத்தின் இறுதியில் (
'மன்மத லீலையை வென்றார் உண்டோ' - பாகம் 100 ) முழுகதையையும் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். அந்த பாகம் மட்டும் நீங்கள் படித்தால் போதும் கதை விளங்கிவிடும்.
இன்னொரு முக்கிய அம்சம் எல்லா பாகத்திலும் காமக்காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் எனது சார்பில் வெகுமதியாக 1000 (விதிவிலக்கான முறையில் நிர்வாகியிடம் அனுமதி பெற்று) இபணம் வழங்குகிறேன்.
நம் தளத்து நண்பர்களும் அவரை வாழ்த்தி இபண சன்மானம் 100ன் மடங்கில் (ஏனென்றால் 100 பாகம் தந்திருக்கிறாரல்லவா) 500க்கு மிகாமல் தந்து, (அதற்குமேல் தர விரும்புவர் நிர்வாக குழு நண்பர்கள் முலமே தர வேண்டும்.) வாழ்த்த வேண்டுகிறேன். ஒரு எழுத்தாளருக்கு நாம் காட்டும் நன்றிக்கடன் அது.