நானும் பலமுறை யோசித்திருக்கிறேன். நாம் சும்மா படங்கள் பதிப்ப்து மற்றும் அவற்றிற்கு விமர்சனம் செய்வது மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். இது போதுமா நம் பங்குக்கு என்று. அதை இன்று விவாதமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். மேலும் நண்பர் கா.தா அவர்க்ளின் பங்களிப்பு என்பது மகத்தானது. அவரின் படைப்புக்கள் மற்றும் கதைகளை படித்தபின் நானே விய்ந்து போயிருக்கிறேன்மேலும் சொல்லப்போனால், நான் நினைத்ததுண்டு.. .. இவர் சதா தளத்திலேயே உலா வருகிறாரே, வேறு அலுவல்கள் இல்லையோ என்று !. .. என்ன இப்படி ஒரு சிலருக்கு மட்டும் தானா நம் தளத்தின் மீது அக்கறை?.. மற்றவர்கள் எல்லாம் வி.ஐ.பி களா?
இவ்வாறு தனி ஒருவர் உருவாக்கிய இல்லம் போல் இத்தளம் புதுமையும் புதுப்பொலிவும் பெற்று தலைவர் அவர்க்ளின் தன்னலம் இல்லா மனப்பான்மையால் வளர்ந்து வருகின்ற நேரத்தில், இந்த இலவச தளத்தில் இல்வசமாக எல்லாவற்றையும் அனுபவிக்க குறைந்த பட்சம் எல்லா படைப்புக்களுக்கும் விமர்சனங்கள் தருவது என்பது கண்டிப்பாக்க வேண்டிய கட்டாயம்.
நானும் இனி என் பங்களிப்பை திருத்திக்கொள்கிறேன்.
தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்
|