வணக்கம் என் இனிய காமலோக நண்பர்களே.
இன்ப அதிர்ச்சி. நெகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே உங்களை தங்க வாசலில் பார்க்கவேண்டும் என்று சொல்லி வந்தார் லோக மேற்பார்வையாளர் பண்பாளர் பச்சி. லோகத்தில் நான் சேர்ந்து எழுதிய முதல் கதை தொட்டு ஒவ்வொரு கதைக்கும் தவறாது பின்னூட்டம் இட்டு என்னை மெருகேற்றியவர் அருமை நண்பர் ராஜேஷ். லோகத்தில் எனக்கு கவியரசர் என பட்டம் கொடுத்து வலுவாக நட்புக்கரம் தந்து எனக்காகவே கதைகளும் படைத்து பெருமைப்படுத்தியவர் புவியரசர் அநபாயன். இந்த நிர்வாக சவாலில் கடைசி பாகத்தை எங்கே நான் பதிக்காமல் விட்டுவிடுவேனோ என்று சற்றே பதட்டமடைத்து தொலை பேசியில் நேரிலும் மற்ற நண்பர்கள் மூலமும் உற்ச்சாக படுத்தியவர் தம்பி ஸ்திரீலோலன். ஆம் கடைசி நேரத்தில் எனக்கு என் வேலைப்பளு நெருக்கடி தந்தது உண்மைதான். இதேபோல் தனி மடலிட்டு உற்சாக படுத்தியர் நண்பர் ராஜேஷ். என் மேன்மையில் தான் எத்துனை பேருக்கு அக்கறை. நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக் என் தொடர்ச்சிகளை படித்து பின்னூட்டமிட்ட அன்பு நண்பர்களுக்கும் என்னை வெல்ல வைத்து சாவால் ராஜாவாக வாகை சூட வைத்த வாக்காளப்பெருமக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.
நன்றிகள் பலகோடி நூறாயிரம் கோடி .
சிற்றின்பம் தன்னை நெஞ்சினிக்க மனமினிக்க
நற்றமிழ் மணம்வீச பகிர்ந்திடும் லோகத்தில்
சற்றே முன் நடந்த சவாலில் வாக்களித்து எனக்கு
வெற்றி கனி தந்த நண்பர்கெலாம் நன்றிகள் பலகோடி
மெல்லிய நுண்ணிடை மஞ்சுளா காதலரோடு
புல்லிய மாண்பினை இந் நிர்வாக சவாலில் நான்
சொல்லிய விதம் படித்தெனக்கு வாக்களித்து நான்
வெல்ல வகை செய்த நல்லிதயங்கள் அனைவர்க்கும்
சொல்லுகின்றேன் நன்றிகள் கோடி இதயம் நெகிழ்ந்திடவே.
இதுவரை என் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அத்தனை நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன். தவிர எனக்கு அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள சக படைப்பாளிகள் திருவாளர்கள் சிநேகன்,சூப்பு 2000,செம்பி, கார்த்தி ஆகியோருக்கும் என் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தனி மடலில் பாராட்டு தெரிவிவித்துள்ள சிநேகன் அவர்களுக்கும் மீண்டும் நன்றி. கவுரவக்கதை படைத்த காமகொடங்கி 68 அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
Last edited by Nallavan1010; 08-07-14 at 02:42 PM.
|