சவால் போட்டியில் வெற்றிவாகைச் சூடிய வசூல் ராஜா .. அட டங் சிலிப்பு... சவால் ராஜா டி ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மிகச் சமீபத்தில் வாக்குகள் பெற்று வாய்ப்பினைத்தவற விட்டாலும் ஜகன் அவர்களையும் அவரது திறமைக்காகவும் படைப்புக்காகவும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கிறேன்.
இந்நேரத்தில் எனது சிறு வருத்தத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டி இருக்கிறது.
பல்லாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நமது மாமன்றம் தினந்த்தோறும் நூறுபேருக்கும் மேலாவது உறுப்பினர்களின் வருகை கொண்ட நமது லோகம் இந்த வாக்கெடுப்பில் வெறும் 38 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இது உண்மையில் வருந்தவேண்டிய ஒன்றே.
நான் இணைந்த புதிதில் வாக்கெடுப்புத் தொடங்கியபோதிலும் எனது வாக்கினைச் செலுத்தி எனது கடமையைச் சரிவரச் செய்தேன். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்யத் தயங்கி ஒதுங்கியது ஏன்..?
கற்பூரம் காட்டி முனுமுனுத்து மந்திரம் சொல்லி நமக்குப் பிரசாதம் தரும் அர்ச்சகருக்குக் கூட தட்சிணையாக சிறிது பணம் வைத்து மதிக்கிறோம்.
இங்கே படைப்பாளிகள் தமது அரும்பெரும் நேரத்தையும் திறமையையும் முன்னிருத்திப் படைப்புகள் வழங்கி நம்மை மகிழ்விக்கிறார்கள். அவர்கள் நம்மிடம் பணத்தையோ பொருளையோ கேட்டு நிற்பதில்லை. அவர்கள் மூலம் நமது மனம் மகிழ்கிறது. அதற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ..? ஐந்துவரிப்பின்னூட்டமும் வாக்கெடுப்பின் போது நம் கடமையைச் செய்யவேண்டும் என்னும் நமது பொறுப்பான செயலும் மட்டும்தான்.. அதை நாம் சரிவரச் செய்கிறோமா என்பதை ஒவ்வொரு உறுப்பினரும் மனதுக்குள் கேட்டுக்கொண்டு சிந்தித்து செயல்படுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அடுத்த வாக்கெடுப்பில் ஒரு நூறு வாக்குகளாவது விழவேண்டும் என்பதை நம் நோக்கமாகக் கொண்டு அனைவரையும் ஊக்குவித்தும் நினைவூட்டியும் செயல்படுவோமாக..
ஆமென்.
|