View Single Post
  #3  
Old 13-11-10, 12:25 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
தோழர் மாகி சொல்வதும் ஒரு வகையில் சரிதான். எதையாவது அடைய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும்போது இருக்கும் த்ரில்லும், உத்வேகமும்... அதை அடைந்தவுடன், தண்ணீர் ஊற்றி அணைத்தது போல் பொசுக்கென்று அடங்கி விடுகிறது. தேடும் ஆவல் மங்கிப் போய்விட்டதோ என்று ஐயமும் வருகிறது.

எனக்கு இப்போது நினைவுக்கு வருவது, "தேடுவதை நிறுத்துங்கள்... தேடியது கிடைக்கும்" என்று ஒரு மாமேதை (பீனா இல்லை) சொன்னதுதான். அது போல, எதை தேடுகிறோம் என்றே விளங்காது, இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தவளை... சரக்கென்று கூந்தல் பற்றியிழுத்து, "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குறும்புப் பெண்ணே?" என்று மாயகிருஷ்ணன் கேட்டது போல் உணர்கிறேன்.
Reply With Quote