தனிமடலை அவுட்லுக்கில் சேமிக்க சிம்பிளான வழி, ஒரு தனிமடல் நமக்கு வந்தால் அதனை இமெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நம் தளத்தில் செட்டிங்ஸ் செய்தால் போதும். நாம் அனுப்பும் மடலை சேமிக்க நேரடி வழி இல்லை. அதற்கு பதில் நாம் அனுப்பும் மடல் எதனை(அல்லது எல்லாவற்றிலும்) BCC என்பதில் நமது பெயரையே இட்டால் நமக்கே ஒரு மடல் + மெயில் வந்து சேரும்.
Quote:
Originally Posted by mayakrishnan
சந்தேகங்கள்- [1]அதிகபட்ச தனி மடல்கள் சேமிக்கபடும் எண்ணிக்கை 50யாக இருக்கிறது. இதனை அதிகரிக்க முடியுமா?
[2]email listing போல தனி மடலில், நான் கதை (ஒவ்வொரு பாகமும்) பதித்தவுடன் எனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் அனுப்புவது spammingயா அல்லது அனுமதி இருக்கிறதா? (விருப்பமில்லாதவர்கள் ஒரு தனி மடல் அனுப்பினால் திரும்ப அவர்களுக்கு spam செய்ய மாட்டேன் என உறுதி மொழி கொடுத்தால்?)
[3]தனி மடல்களை நிர்வாக உறுப்பினர்கள் வாசிக்க முடியுமா?
|
1. 50 இல்லை 500 கொடுத்தாலும் நண்பர்கள் இன்னும் கேட்பார்கள். ஏனென்றால் எந்த தனிமடலையும் அழிக்க விரும்ப மாட்டேன்கிறார்கள். 50க்கு மேல் அதிகப்படுத்தினால் அது தளத்தை இயக்கும் சர்வருக்கு கூடுதல் சுமை கொடுக்கும் என்பதால் இப்படி குறைந்த அளவே லிமிட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவே உறுப்பினர் இருப்பதால் தமிழ்மன்றத்தில் 200 வரை லிமிட தரப்பட்டுள்ளது.
2)தனிமடல் கொடுப்பது முழுக்க முழுக்க உறுப்பினர் விருப்பம், அது பிறருக்கு தொந்தரவு, சங்கடமாக இருக்கும் பட்சத்தில் அவர்களே நேரிடையாக தனிமடல் அனுப்புவருக்கு சொல்லலாம். அதை மீறும் பட்சத்தில் நிர்வாக உறுப்பினரிடம் புகார் செய்து கொள்ளலாம். நிறைய தனிமடல் நடவடிக்கை ஒருவரது தனிமடல் எண்ணிக்கை உச்சவரம்பு லிமிட் எட்டினால் பிறகு அவர் எந்த தனிமடலும் பெற முடியாமல் போகும்.
3)தனிமடல் எதுவும் நிர்வாக உறுப்பினரால் நேரடியாக வாசிக்க முடியாது, தலைமை நிர்வாகி அவர்களிடம் தனிப்பட்டு விண்ணப்பித்து தான் பெற முடியும். நிர்வாகி அவர்கள் தேவைப்பட்டால் ஒருவரது தனிமடல் நடவடிக்கைகளை கண்கானிக்க முடியும். ஆனால் இதுவரை அம்மாதிரி நமது தளத்தில் எவரொருவர் தனிமடலும் கண்கானிக்கப்படவில்லை என்பது உண்மை.
நிர்வாக உறுப்பினருக்கு கொடுக்கும் தனிமடலை அவர்களால் வாசிக்க முடியும்